கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி இல்லாததால் ரசிகர்கள் வன்முறை..!

பிகில் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. “பிகில்”  திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் வழங்க முடியாது என கூறியிருந்த நிலையில் இறுதியாக அரசு நிபந்தனை பெற்றபின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 5 மணிக்கு  சிறப்பு காட்சியில் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு சிறப்புக் காட்சிகள் வெளியிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர்.
கோபமடைந்த விஜய் ரசிகர்கள் கையில் கிடைத்த பொருள்களை சாலையில் எடுத்து வீசினர்.


மேலும் காவல்துறை வைத்திருந்த பேரிங் கார்டையும் வீசி எறிந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட 36 பேர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
murugan