மாநாடு மேடையில் கதறி அழுத சிம்பு.! அவரை தேற்றிய படக்குழுவினர்.!

மாநாடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வின் போது, மேடையில் பேசிய சிம்பு கடைசியில் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார்.

சிலம்பரசன் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் பேசினர். அப்போது பேசிய படத்தின் ஹீரோ சிலம்பரசன். ,’ இந்த படத்தில் ரெம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். அனைவரும் இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வேலைசெய்துள்ளனர்.

யுவனின் ராசி நட்சத்திரம் கேட்டு அதே ராசி நட்சித்திரம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டும். ஏனென்றால் நான் என்ன செய்தாலும் யுவன் தாங்கிக்கொள்வார். என்னை முழுதாக புரிந்துகொள்வார். என படக்குழுவினர் அனைவரையும் சிரித்தபடி பாராட்டினார்.

இறுதியில், எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நீங்கதான் பாத்துக்கணும் என கூறி மேடையில் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார். இதனை அடுத்து, படக்குழுவினர் அவரை தேற்றினார். ரசிகர்கள் தங்கள் கரகோஷம் மூலம் ஆறுதல் சொல்ல முற்பட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.