சிவசங்கர் பாபா வழக்கு .., 5 பெண்களுக்கு நிபந்தனை ஜாமீன்..!

சிவசங்கர் பாபா வழக்கில் 5 பெண்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பக்தைகள் உட்பட 5 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது. 

ஆசிரியை தீபா வெங்கட்ராமன், நிர்வாகி ஜானகி சீனிவாசன், சிவசங்கர் பாபாவின் பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகிய 5 பேரும் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

author avatar
murugan