உலகநாயகன் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட காவியம் !

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகாஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த செட்டில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment