உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்கக் உள்ளது அணிகள் எல்லாம் திவீர பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஒய்வு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.தோனி சரியாக ஆடவில்லை மேலும் இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழி விட வேண்டும் என்று கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அழுத்தம் தெரிவித்து வருவது கண் கூட தெரிகிறது.
இந்நிலையில் தோனியின் ஒய்வு குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து ஜாம்பவான் ஆன ஷேன் வார்னே அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து ஏன் இத்தனை அழுத்தம் கொடுக்கிறீர்கள் தோனி எப்பொழுது ஓய்வு பெற விரும்புகிறாரோ அப்போது அவர் ஓய்வை அறிவிப்பார்.மேலும் உலககோப்பையில் ஏன் இந்திய அணியில் தோனிக்கு இடம் அளித்தீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர் இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரர் , அவர் இல்லாத உலககோப்பைக்கான இத்திய அணியை என்னால் நினைக்க கூட பார்க்க முடியவில்லை அவர் உலககோப்பைக்கான இந்திய அணியில் இருப்பது அவசியம் அவருடைய ஓய்வை சிலர் எதிர்பார்ப்பது என்னால் நம்ப முடியல்லை.
அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் அவருடைய ஓய்வை சரியான நேரத்தில் அவரே எடுப்பார்.அதை பற்றி மற்றவர்கள் கவலை கொள்ள தேவை இல்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது நல்ல பாமில் உள்ளார்.
அவருக்கு 2018 மோசமாக தான் இருந்தது ஆனால் நடப்பாண்டில் அவருடைய ஆட்டம் நம்பிக்கை அளிக்கிறது.அதுவும் ஐபிஎல் போன்றவற்றில் அவருடைய ஆட்டம் பேசும் படியாக இருந்தது.தற்போது அவருடைய மொத்த ஸ்ட்ரைக் ரேட் 134.62 ஆக உள்ளது. என்று தோனியின் ஒய்வு கூறித்து குரல் எழுப்பியவர்களுக்கு சுழற்பந்து சூறாவளியின் பதில் வாயை அடைத்து விட்டதாக கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.