ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!

ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

 இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி பெய்த மழையால் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சங்கோலி ராயண்ணா, ரயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். நாலிரவில் அவர்கள் உறங்கி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவனை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து, திங்கட்கிழமை அதிகாலை, போலீசார் தேடுதல் வேட்டையில்  சிக்கிய தினேஷ், உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.