செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை.! அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.! உயர்நீதிமன்றத்தில் வாதம்.!

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது. 

அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்யப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியான போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இருந்தது. மூன்றாவது நீதிபதி முன் விசாரணை தொடங்கி நடைபெற்ற போது இரு தரப்பும் தங்கள் விளக்கங்களை தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து ஜூலை 11,12க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில். இன்று விசாரணை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதிடுகையில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் அமலாக்கத்துறை வசம் இல்லை. மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.