செந்தில் பாலாஜி காவல் 18-வது முறையாக நீட்டிப்பு..!

சட்டவிரோத குற்றமான, பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையும்,  3,000 பக்க ஆவணங்களையும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

கொடநாடு வழக்கு..! எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேதி மாற்ற கோரிக்கை..!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. தற்போது செந்தில் பாலாஜி  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 29-ம் தேதி தேதி 17-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 31-ம் தேதி (அதாவது இன்று ) வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan

Leave a Comment