பரபரப்பு : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து. 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொங்கல் வெட்டி-சேலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள், ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment