செம்ஸ்டர் தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு..!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளியில் செம்ஸ்டர் தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், நிலவிவரும் அதிவேக கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நா.சு. சந்தோஷ்குமார் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் வரும் 20.01.2022 முதல் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

GO

author avatar
murugan