ராகுலுக்கு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் கடிதம்!

ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம்.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.

ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை நடைப்பயணத்தின் போது கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் டெல்லி போலீஸ் தோல்வியை சந்தித்தது.

எனவே, அடுத்தகட்ட நடைபயணம் பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதால் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களை உளவுத்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment