சந்திரயான் – 2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி 2வது முறையாக அதிகரிப்பு

ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 22  ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  தெரிவித்தது.அதன்படி சந்திராயன் -2 விண்கலம் கடந்த ஜூலை 22 -ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில்  சந்திரயான் – 2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்க தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.