“வைரஸை கட்டுப்படுத்த அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை”-மோடி

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், உலக முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அறிவியல் நமக்கு இதுவரை உதவவில்லை என பிரதமர் மோடி கூறினார்.