பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. தளர்வுகளை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அரசு அறிவித்து இருக்கிறது. இருப்பினும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சில உயர் நீதிமன்றத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அது குறித்த தகவலையும் வருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு டிசம்பர் மாதம் முதல் துவங்கும் எனவும், பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக 10 நாளில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…