இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல மூன்றாண்டுக்கு தடை – சவூதி அரபியா அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படும் வகையிலும் மற்றும் தற்போது புதியவகை வைரஸ் பரப்புவதைத் தடுக்கும் முயற்சிகளின் கீழ் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளுக்குச் செல்ல அந்நாட்டு மக்களுக்கு, சவுதி அரேபியா மூன்று ஆண்டு பயணத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள சிலர், கடந்த 2020 மே மாதம் முதல் முறையான முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தற்போது தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செல்பவர்கள் சட்டப்பூர்வமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் அல்லது போக்குவரத்துக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பயண விதிமுறைகளை மீறி தடை விதிக்கப்பட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றுவிட்டு செளதி அரேபியா திரும்பும்போது, அவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவூதி அரபியாவில் நேற்று 1,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 520,774 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,189 பேர் உயிரிழந்துள்ளனர்.  2020 ஜூன் மாதத்தில் தினசரி நோய்த்தொற்றுகள் 4,000 க்கு மேல் இருந்து வந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்