கிராமங்களில் பள்ளிகள் திறப்பு- ஆய்வு செய்ய உத்தரவு..!

கிராமப்புறங்களில்  தொடக்கப்பள்ளிகளை  மீண்டும் திறப்பது பற்றி ஆய்வு செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை திறப்பது குறித்தும், சத்துணவு மாணவர்களுக்கான அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்த கணிப்பும் இல்லாததாலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்ய யோசனையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

author avatar
murugan