சாத்தான்குளம் கொலை வழக்கு ! சிபிஐ -சிபிசிஐடி ஆலோசனை

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக  சிபிஐ -சிபிசிஐடி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிபிஐ முதலில் கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது நிலையில் 5 போலீசாரை நேற்று வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ போலீசாரிடம் விசாரணை நடத்தியது.

 இந்த வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலில் எடுக்க வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் மற்றும் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.