இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் தோனி.!

இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் தோனி என்று கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார்.

கூகுளில் “Dhoni” என தேடுனாலே அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு கோபப்பட்டால், தனது கோபத்தை வீரர்களிடம் காட்டமாட்டார் என்பதே.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் கேரி கிரிஸ்டன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியது தோனி மிகவும் சிறந்த வீரர் அவருடைய சாதனைகள் அழிக்கமுடியதாக சாதனை மேலும் நான் இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் தோனி என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.