சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை…! முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்.பி கனிமொழி அஞ்சலி…!

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ், முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், எம்.பி.கனிமொழி அவர்கள் அஞ்சலி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரையும் காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட காவத்துறையினர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், இது தொடர்பான வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ள நிலையில், ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரும் உயிரிழந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இன்று இவர்களது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், எம்.பி.கனிமொழி அவர்கள், இவர்களது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.