சாத்தான்குளம் இரட்டைக்கொலை – காவலர் பரபரப்பு சாட்சியம்!

காவல் நிலையத்திலிருந்து வரும்போதே இருவரும் காயத்துடன் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடன் இருந்தனர் என்று சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார். 2 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் முத்துராஜ், செல்லத்துரைத்தான் அழைத்து சென்றனர். கோவில்பட்டி கிளைசிறை மாரிமுத்து 2 போலீசாரையும் நீதிபதி முன் அடையாளம் காட்டினர்.

இதனிடையே, சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், போலீஸார் என 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்