நன்கொடை கேட்டு கொலை மிரட்டல்.? தூத்துக்குடி பாஜக பிரமுகர் கைது.!

தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில்செய்யப்பட்டு வரும் தனியார் கிரஷர் ஆலைக்கு நேற்று பாஜக இளைஞரணியை சேர்ந்த பூபதி ராஜா மற்றும் சில பாஜகவினர் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களிடம் பூபதி ராஜா நன்கொடை கேட்டதாக தெரிகிறது. அப்போது ஆலையில் இருந்த மேலாளர், நிறுவனர் இங்கு இல்லை என்பதால் அவர் வந்த பிறகு நன்கொடை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த பூபதி ராஜா உள்ளிட்டோர் அவரிடம் தகராறு செயது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆலை ஊழியர்கள் கொடுத்த புகாரின் பெயரில் பாஜக இளைஞரணி பொறுப்பாளர் பூபதி ராஜாவை சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment