“சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்;இபிஎஸ் பலவீனமாகவுள்ளார்” – டிடிவி தினகரன்!

ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக கட்சியை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மூன்று நாட்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று,இது உலகம் அறிந்த வெளிச்சம்.இதை நான் சொல்லிதான் தெரியனுமா?,இப்போது இதை நான் கூறினால் தேர்தலில் தோல்வியுற்றதால் கூறினேன் என்பீர்கள்,’வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம்'”,என்று கூறினார்.

மேலும்,செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,”ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக கட்சியை மீட்டெடுப்போம். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,சசிகலா அவர்களுடைய  ஆதரவு அமமுகவுக்கு உள்ளதா? அமமுக என்ற வார்த்தையை அவர் இதுவரை பயன்படுத்தியது இல்லையே? என்று செய்தியாளர் கேட்டதற்கு,”சசிகலா அவர்கள் முதலில் எனது சித்தி,அதன்பிறகுதான் அரசியல் எல்லாம்.அந்த உறவு எப்போதும் நன்றாகவே உள்ளது.மேலும்,சசிகலா அவர்களுடைய ஆதரவு அமமுகவுக்கு எப்போதும் உள்ளது.எனினும்,அவர் அதிமுக பொதுச்செயலாளர் அவர் எப்படி அமமுக பற்றி பேசுவார்கள்.அதேபோல,அவர் அதிமுக கொடியை என்னை பிடிக்க சொல்ல முடியுமா?, எனது பாதை வேறு,அவருடைய பாதை வேறு ,ஆனால் எங்களது இலக்கு ஒன்றுதான்”,என்றார்

மேலும்,சசிகலா அவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால்,எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர் கேட்டதற்கு டிடிவி தினகரன் கூறுகையில்:”ஓபிஎஸ் அவர்கள் நிதானமாக சிந்தித்து பேசக்கூடியவர்,அவர் கருத்து சொன்னாள் சரியாக இருக்கும்.ஆனால்,எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பலவீனமாக உள்ளார்; பதற்றத்தில் சசிகலா குறித்து அவதூறாக பேசுகிறார்,தற்போது அவரிடம் தடுமாற்றம்,பயம் இருக்கிறது”,என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…

29 mins ago

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

5 hours ago

என்னது 150 கோடியா? முடியவே முடியாது ‘GOAT’ படத்தை வாங்க மறுத்த நிறுவனம்!

சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…

5 hours ago

அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…

5 hours ago

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!

சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…

6 hours ago

வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளம் நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…

6 hours ago