சர்ச்சையில் சிக்கிய சர்க்கார்….!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்க்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு மிக பிரமாதமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் வருண்  என்பவர் புகாரளித்துள்ளார். அவர் ‘ செங்கோல் ‘ என்ற பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.
அந்த கதையை திருடிதான் முருகதாஸ் சர்க்கார் படத்தை இயக்கியுள்ளார் என்று புகாரளித்துள்ளார். இது குறித்த விசாரணை நடத்தி வருகிறது எழுத்தாளர் சங்கம். கத்தி படமும் இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment