அகிலேஷ் யாதவ் 50வது பிறந்தநாள்… தக்காளி கேக் வெட்டி விலைவாசி உயர்வுக்கு வினோத எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள்.!

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளுக்கு தக்காளி வடிவில் கேக் வெட்டி அவரது தொண்டர்கள் கொண்டாடினர். 

உத்திர பிரதேச எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை குறிப்பிடும் வகையில், உத்திர பிரதேசத்தில் உள்ள விலைவாசி உயர்வு குறிப்பாக தக்காளி விலை உயர்வை குறிக்கும் வகையில் வினோதமாக பிராத்தனை கொண்டாடினர்.

அதாவது, தக்காளி வடிவிலான கேக் வெட்டி அகிலேஷ் யாதவ் பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் இனிப்புக்கு பதிலாக மற்றவர்களுக்கு தக்காளி கொடுத்து வினோதமாக பிறந்தநாளை கொண்டாடினர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.