கள நிலவரத்துக்கு ஏற்பவே சலூன்களை திறக்க முடியும் – தமிழக அரசு

கள நிலவரத்துக்கேற்ப சென்னையில் சலூன்களை திறக்க அனுமதிக்க முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

தமிழக முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணையின் போது கள நிலவரத்துக்கேற்ப சென்னையில் சலூன்களை திறக்க அனுமதிக்க முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை தவிர்த்து பிற இடங்களில் சலூன்களை திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. சென்னையில் சலூன் கடைகளை திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கை ஜூன் 8க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்