இந்த விருதை பெற இன்னும் என்ன செய்ய வேண்டும்.? விரக்தியில் பிரதமருக்கு கடிதம் எழுதிய வீராங்கனை.!

எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அந்தாண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு அர்ஜுனா விருதுகளும் மற்றும் துரோணாச்சார்யா விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

அர்ஜுனா விருதுக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது அவருக்கு அறிவிக்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘ அனைத்து வீரர்களுக்கும் அர்ஜுனா விருது வாங்க வேண்டும் என்பது கனவு. ஏனென்றால், விளையாட்டு வீரர்கள் ஆபத்தில் தங்களை ஈடுபடுத்துக்கொள்கிறார்கள். எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். மல்யுத்த பிரிவில் எனக்கு அர்ஜுனா விருது வாங்க இன்னும் தகுதி வரவில்லையா.’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.