கேரள விமான விபத்து.! ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்.!

கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார்.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில்விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இந்த துயர விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘ குண்டோட்டி மெர்சி நிவாரண மருத்துவமனை (Kundotti Mercy Relief Hospital)  மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (Kozhikode Medical College Hospital) அனைத்து இரத்தக் குழு நன்கொடையாளர்களும் முன் வந்து ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட டிவிட்டை ரீ-டிவீட் செய்து பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ கோழிக்கோடு விமான விபத்து உண்மையில் சோகமான செய்தி. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என தனது வருத்தங்களை பதிவிட்டுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.