சபரிமலை விவகாரம்: கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லை பகுதியில் நிறுத்தம்…!!

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளின் இயக்கம் முடங்கியதால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள்
தவித்து வருகின்றனர்.

கேரளா அரசு சபரிமலை விவகாரத்தில் உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment