ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் : சி.பி.சி.ஐ.டி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி முருகன் மீது புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் சிபிசிஐடி விசாரிக்க கோரி முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பாலியல் புகாரை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க விசாகா கமிட்டி பரிந்துரைத்தது.

இதனையடுத்து, போலீஸ் ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment