ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சபரிமலை சன்னிதானம் இன்று நடைதிறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் (ஒரு மண்டலம்) கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வழக்கத்தை விட இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மண்டல பூஜையன்று மட்டும் பக்த்ர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையானது 70 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.

பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க… சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை.!

அதனை அடுத்து மகரஜோதி தரிசனத்திற்காக, மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது இன்று (டிசம்பர் 30) மாலை திறக்கப்பட உள்ளது.  இன்று மாலை சபரிமலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை (டிசம்பர் 31) முதல் வழக்கம் போல பக்த்ர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஜனவரி 15 ஆம் தேதி, தை 1ஆம் நாள் மகர ஜோதி பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும்.  இந்த நிகழ்வானது சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்கள் வருகையை காண்பதாக ஐதீகம். அதற்க்கடுத்து ஜனவரி 20ஆம் தேதி வரையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இரவு ஹரிவராசனம் நிறைவு பெற்ற பின்னர் நடை சாத்தப்படும்.

மீண்டும் ஒவ்வொரு தமிழ் மதமும் முதல் 5 நாட்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்த்ர்கள் வருகைக்காக திறக்கப்படும். அப்போது பக்க்தர்கள் சிறுவழிப்பாதை (பம்பை) வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெருவழி எனும் காட்டுப்பாதை கார்த்திகை, மார்கழி என இரு மாதங்களுக்கு மட்டுமே திறந்து இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மகர ஜோதி தரிசனதிற்க்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கோயில் வளாகம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி உள்ளிட்ட கோயில் பகுதிகள் அனைத்தும் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்படுகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.