கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் வருடா வருடம் இந்த மாதம் முதல் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். மண்டல பூஜைக்காக தற்போது ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஸ்வாமி சன்னதியில் தரிசனத்திற்க்காக குவிந்தனர்.
பக்தர்களின் சரணகோஷங்களுக்கு இடையே மண்டல பூஜைக்காக தற்போது நடை திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.