கிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ரஷ்ய படைகள்..!

ரஷ்ய படைகள்  கிவ் மீது 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளை  ரஷ்ய படைகள் ஏவி தாக்கியதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று காலை முதல் தொடங்கி போர் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள்  கிவ் மீது 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளை  ரஷ்ய படைகள் ஏவி தாக்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.20 மணிக்கு கிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

இதுகுறித்து, உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் தலைவரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைன் தலைநகர் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை ஏவுகணையால் தாக்கப்பட்டது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கியேவ் மீதான தாக்குதல் தொடர்கிறது என்று தெரிவித்தார்.

author avatar
murugan