பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் – திருமாவளவன்

பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் என திருமாவளவன் பேட்டி. 

விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக இந்திய அரசு அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

பாஜக வாக்கு வங்கியை நம்பி இயங்குகிறது. ஆர்எஸ்எஸ்-ஐ பொறுத்தவரையில், பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இந்த இயக்கம் இருட்டில் செயல்படக்கூடிய ஒன்று. இந்த இயக்கம் வன்முறையை தூதுவதர்க்கு, வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும் வண்ணமும் இந்த இயக்கம் செயல்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment