29 நாட்களில் 89 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 89 கோடியே 7 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 82 லட்சத்து 38 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 7 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்