#Breaking:தமிழகத்தில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன்!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்  வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மேலும்,கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மத்திய அரசே கூறியுள்ளது என்றும் கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்  ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனவும் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.