பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் முழு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்