Categories: இந்தியா

“ரூபாய் 1,700,00,00,000 கடன் வாங்கி மோசடி” CBI வழக்குப்பதிவு..!!

புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து ரூ.1,700 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த வி.எம்.சி நிறுவனத்தின் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் வி.எம்.சி என்ற நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ இந்த நடவடிக்கையை கையாண்டுள்ளது.
இந்த புகாரில் ஹைதராபாத் வி.எம்.சி நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 593 கோடி ரூபாயும், பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் ஜே.எம் நிதி நிறுவனம் ஆகிய வங்கிகளிடம் இருந்து 1,207 கோடி ரூபாயும் கடன் பெற்று, அந்த கடனை திருப்பி செலுத்த வில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் வி.எம்.சி நிறுவனத்தின் இயக்குனர்களான உப்பலப்பட்டி ஹிமா பிந்து, உப்பலப்பட்டி வெங்கட் ராமராவ், பாக்வாடுலா வெங்கட் ரமணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, அவர்களின் மற்றும் வீடு அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

15 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

16 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

16 hours ago