கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் பொங்கல் கருணை கொடை ரூ.1000 வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், 2019-2020-ம் ஆண்டு 240 நாட்கள், அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கும், ஆறு மாதம் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இந்த கருணைத் தொகை ரூ.1000 வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்