2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் – சவுரவ் கங்குலி

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த், விளையாட மாட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான ரிஷப் பந்த், கடந்த மாதம் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்த் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் முன்னாள் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, இந்தாண்டு 2023க்கான ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து டெல்லி அணியின் நிர்வாக இயக்குனரான கங்குலி கூறியதாவது, பந்த் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார், அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு தான். இது அணியை வெகுவாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment