நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.79% ஆக அதிகரிப்பு – மத்திய அரசு

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை.

நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் 4.21% ஆக இருந்த சில்லறை பணவீக்கம் 2022 ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், 0.84% உயர்ந்து, தற்போது 7.79% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசியே, பணவீக்க விகிதம் அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்