வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவுடார்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசிய அவர் இன்று திட்டமிட்டு என்ன பொய் செய்தி பரப்புகிறார்கள்; 68 சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 7.5 சதவீதம் எனவும், சில குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 10.5 சதவீதம் எனவும், இதர சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 2.5 சதவீதம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல இப்போது சவுடார் பட்டியில் இருந்து சத்தியமாக சொல்லுகிறேன்.
மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் பேச்சால் வன்னியர் சமூகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பாமகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…