உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள்.

நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை!

Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் காணப்படும் DNA வரிசைகளின் குடும்பமாகும். Crispr-Cas உயிரணுக்களில் இருந்து இருக்கும் எச்.ஐ.வி தடயத்தை DNAவை வெட்டி, தேவையற்ற மரபணுக்களை நீக்க அனுமதிக்கிறது.

READ MORE  – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

உலகளவில் எச்.ஐ.வி நோயிக்கு சிகிச்சையளிப்பது கடினமாக உள்ளது. இது உடலில் உள்ள பல்வேறு வகையான செல்கள் மற்றும் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிகிறது.

ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

ஆனால், அதன் செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று கூறினார். அப்போதுதான் எச்.ஐ.வி நீர்த்தேக்கத்தை பிளாக் செய்து, மனிதர்களை குணப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளை பரிசீலிக்க முடியும்.

இந்த நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நாள் சிகிச்சையாக உருவாக்கி, வாழ்நாள் முழுவதும் வைரஸ் தடுப்பு மருந்துகளின் தேவையை நிறுத்த முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்னர். இது ஒரு கண்டுபிடிப்பாக இருந்தபோதிலும், விஞ்ஞானிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படும் என்று கூறியுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.