சினிமா

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விஜய் கோட் படத்தில் பிஸியாக இருந்த காரணத்தால் இன்னும் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் வெளியான பிறகு தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்தாராம். அப்போது சிவகார்த்திகேயன் எச்.வினோத்திடம் தனக்கு எதாவது கதை இருக்குமா? என்பது போல கேட்டாராம்.

அதற்கு இயக்குனர் எச்.வினோத் கதை ஒன்றை கூற, அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால், எச்.வினோத் சிவகார்த்திகேயனுடன் கண்டிஷன் ஒன்றையும் போட்டாராம். அது என்னவென்றால், நான் இப்போது விஜயின் அடுத்த படத்திற்கான வேளைகளில் இருக்கிறேன். அதை முடித்த பிறகு தனுஷ் வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறேன்.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான் உங்களை வைத்து என்னால் இயக்கமுடியும். அதற்கு இடையில் திடீரென என்னை அஜித் அழைத்து படம் செய்ய சொன்னார் என்றாலும் கூட நான் அங்கு சென்றுவிடுவேன் என் மீது நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டாராம். இதன் காரணமாக சிவகார்த்திகேயன் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். இந்த தகவலை சினிமா யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

6 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

7 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

7 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

12 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

12 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

12 hours ago