4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்து, சிறையில் இருந்து இன்று சற்றுமுன் விடுதலையான சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்று இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனார். இதனிடையே, கடந்த 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று சசிகலாவை, இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சசிகலாவிடம் விடுதலைக்கான கையொப்த்தை பத்திரத்தில் பெற்றனர்.
மேலும், விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்தாக கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் கூறியுள்ளார். சசிகலாவின் கொரோனா சிகிச்சை ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…