’’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” – ராமதாஸ் மறைமுக விமர்சனம்.! ..!

பெங்களூரில் இருந்து நேற்று காலை சென்னைக்கு புறப்பட்ட சசிகலா ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர் வழியாக சென்னை வந்தார். வரும் வழியில் சசிகலாவின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேவனஹள்ளியிலிருந்து சென்னை இடையிலான சுமார் 380 கி.மீ. தூரத்தை அவர் கடக்க 20 மணி நேரத்திற்கும் மேலானது. பெங்களூரில் தொடங்கிய பயணம் 20 மணி நேரம் தொடர்ந்த நிலையில்  கார்கள் மாறி மாறி சசிக்கலா சென்னை வந்தடைந்தார். பெங்களூருவில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட சசிகலா இன்று … Read more

அமைச்சர்கள் புகார் கொடுப்பது அவர்கள் பயத்தை காட்டுகிறது – சசிகலா..!

பெங்களூர் சிறையில் இருந்து கடந்த 27-ம் தேதி விடுதலையான சசிகலா முதல் முறையாக பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் காரில் இருந்தபடியே பேசிய சசிகலா, அதிமுக கொடியை நான் பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் புகார் கொடுத்தது அவர்கள் பயத்தை காட்டுகிறது. தொண்டர்களுக்காக நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன். புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்கு … Read more

பிளானை மாற்றி சென்னைக்கு பயணம்.. போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலா.. !

அதிமுக உறுப்பினர் காரில் ஏறி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி தமிழகம் வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தது. சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

#BREAKING: அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை -காவல்துறை ..!

பெங்களூரில் இருந்து சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார். அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சசிகலா வாகனத்தின் பின் 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அமுமுக கட்சியினர் இதர வாகனங்களை பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் வழியிலே நிறுத்தப்படும். சசிகலா … Read more

#BREAKING: அதிமுக கொடியுடன் சென்னை புறப்பட்ட சசிகலா..!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலையானார். ஆனால் கொரோனா இருந்ததால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். இது அதிமுகவினர் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் … Read more

கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது- அமைச்சர் ஜெயக்குமார்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிசைப்பெற்று வந்த சசிகலா மருத்துவர்களின் பரிந்துரை பெயரில் தற்போது பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில், சசிகலா நாளை சென்னை வர உள்ளார். இதைத்தொடர்ந்து, சசிகலா தமிழகம் வருகை குறித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மிகப்பெரிய இயக்கம் இது; கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது என பதிலளித்துள்ளார். சசிக்கலாவை கண்டு அதிமுகவிற்கு பயம் இல்லை. … Read more

#BREAKING: சசிகலா வருகை…சென்னையில் பேரணி நடத்த அனுமதி மனு..!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், சசிகலா கொரோனா சிகிக்சை பெற்று வந்தநிலையில், கடந்த 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து … Read more

சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணத்தை நிறுத்த முடியாது – டிடிவி தினகரன்..!

இன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  பெங்களூரில் உள்ள சசிகலா 7-ஆம் தேதி தமிழகத்திற்கு  திரும்பி வருகிறார். அதனால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள், தமிழக மக்கள் சசிகலா நல்லவிதமாக வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள கழக தொண்டர்கள் தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென திரண்டு இருந்து சசிகலாவை வரவேற்க தயாராகி வருகிறார்கள். … Read more

#BREAKING: பிப்ரவரி 7-ல் தமிழகம் வரும் சசிகலா- டிடிவி தினகரன்..!

சசிகலா வருகின்ற 7-ஆம் தேதி தமிழகம் வருவார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த மாதம் 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31-ம் … Read more

சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது ? தினகரன் விளக்கம்

ஒரு வார காலம் ஓய்வுக்‍குப்பின் சசிகலா சென்னை திரும்புவார் என்று  தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கடந்த 20-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று … Read more