வரதராஜனை அழைத்து சென்று காட்ட தயார்- அமைச்சர் விஜயபாஸ்கர்!

டிவி நடிகர் வரதராஜனை அழைத்து சென்று மருத்துவர், தூய்மை பணியாளர்களின் பணிகளை காட்ட தயார் என சுகாதாரத்துறை துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன், அரசுக்கு எதிராக தவறான தகவலை அளித்துள்ளார். அவர் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிரான தவறான தகவல்களை அளித்த அவரை அழைத்து சென்று மருத்துவர், தூய்மை பணியாளர்களின் பணிகளை காட்ட தயார் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5,000 படுக்கைகள் உள்ளன எனவும் கூறினார்.