RCBvsRR: 5 ஓவர் போட்டி !மழையால் மீண்டும் போட்டி ரத்து

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன்  ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆனால் மழை காரணமாக போட்டி 5  ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.5 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்தது.பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கோலி 25 ரன்கள் அடித்தார்.

இதன் பின் 63 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.ஆனால் ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 41 எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது.இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

Leave a Comment