பாலியல் பலாத்காரம்..! வாய்பேச முடியாத பெண்ணிற்கு ஆண் குழந்தை..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அப்பரசம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மகள் கெளதமி (25)  காது கேட்காத , வாய் பேச முடியாதவர். இவருக்கு சில மாதங்களுக்கு  முன்  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

இதை தொடர்ந்து அவரது பெற்றோர் கெளதமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரியாமல் பெற்றோர்கள் குழம்பினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் கெளதமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதனால் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

author avatar
murugan