சூர்யாவின் 2D நிறுவன தயாரிப்பில் நடிக்கவுள்ள ரம்யா பாண்டியன்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2D நிறுவனத்தில் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் புதியதாக படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோமாளி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் அதற்க்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை, எனவே அண்மையில் இவர் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட துவங்கினார். அப்போது ஒரு புகைப்படம் மிகவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியதை அடுத்து இவர் அதிகம் பேசப்பட்டார். பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகிய இவர், அதன் பிறகு அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் பிரபலமாகிய ரம்யா, தற்பொழுது புதியதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமாகிய 2D நிறுவனத்தின் கீழ், இயக்குனர் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட உள்ளாராம். மேலும், இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

author avatar
Rebekal