Categories: இந்தியா

சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டம்…!!

சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், மாற்று பாதையில் இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தையும் ஸ்ரீலங்கா இணைக்கும் ஒரு மணல் திட்டான ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அப்போது மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் அவ்வரசு சேது சமுத்திர திட்டத்தை அப்பகுதியில் அமல்படுத்த 2013ம் ஆண்டு திட்டமிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் தனி நபராக முன்வந்து ஒரு வழக்கை தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், ராமர் பாலம் இந்து மதத்தின் அடையாளங்களின் ஒன்றாக இருப்பதால், அதை சேதப்படுத்துவது மதரிதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு , அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ”சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. அது ஒரு தனிப்பட்ட மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை கொண்டதாக உள்ளது. அதை அகற்றினாலோ அல்லது சேதப்படுத்தினாலோ மத ரீதியிலான சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் அத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தவே மத்திய அரசு எண்ணுகிறது” என்று விளக்கம் அளித்தார். மேலும், மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள காரணத்தால், வழக்கை தள்ளுபடி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Dinasuvadu desk

Recent Posts

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

44 mins ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

50 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

51 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

1 hour ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

1 hour ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

2 hours ago